மாமல்லபுரத்தில் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை- கலெக்டர் ராகுல்நாத்

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.
மாமல்லபுரத்தில் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை- கலெக்டர் ராகுல்நாத்
Published on

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மாமல்லபுரத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்களான தங்குமிடம், உணவு, பயணம், சாகச பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, உள்ளிட்ட தொழில்களை தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் செய்து வருகிறது.

இவை முறையாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் அனுமதி பெறாமல், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதிவு பெற்று அந்த அனுமதியுடன், செயல்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி முறையாக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் வரும் ஜூலை.31-ந் தேதிக்குள் சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com