என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக வருகை ரத்து
- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
- மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார்.
சென்னை:
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.






