அமைதியும் கருணையும் நிறைந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்: விஜய் வசந்த் எம்.பி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைதியும் கருணையும் நிறைந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்: விஜய் வசந்த் எம்.பி
Published on

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புனித நோன்பின் நிறைவை குறிக்கும் இந்த புனித நாளில் சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

தியாகம், பொறுமை, கட்டுப்பாடு மற்றும் கருணை ஆகிய உயர்ந்த பண்புகளை நமக்குள் வளர்த்தெடுக்க வழி காட்டும் இந்த புனித காலம், மனித நேயத்தின் உண்மையான அர்த்தத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

ரம்ஜான் மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட நோன்பும் தொழுகையும், நம் உள்ளங்களை சுத்திகரித்து, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. பசியின் வேதனையை அறிவதன் மூலம், அண்டை அயலாரின் துயரங்களை புரிந்து கொள்ளும் மனப்பான்மையை இது உருவாக்குகிறது.

உதவி தேவைப்படுவோருக்கு கரம் நீட்டும் மனம், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி காணும் பண்பு இவை அனைத்தும் இந்த பண்டிகையின் பெருமைமிகு செய்தியாகும்.

நபிகள் நாயகம் அவர்கள் போதித்த மனிதநேயத்தின் உயரிய மதிப்புகள் இன்றும் நமக்கு வழிகாட்டுகின்றன. “உங்களுள் சிறந்தவர் மற்றவர்களுக்கு நன்மை செய்வவரே” என்ற அவரின் போதனை, சமூக ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

அந்த உயர்ந்த வழிகாட்டுதல்களை நம் தினசரி வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம், நல்லிணக்கமான மற்றும் நீதியுள்ள சமூகத்தை உருவாக்க முடியும்.

இந்த மகிழ்ச்சியான நாளில், அனைவரின் வீடுகளிலும் சந்தோஷமும் சமாதானமும் நிலைத்திருக்கட்டும். நம் சமூகத்தில் ஒற்றுமை மேலும் வலுப்பெறட்டும்.

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்த புனித நாளில் நாம் மேற்கொள்ளும் பிரார்த்தனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உலகம் முழுவதும் அமைதியும் வளமும் நிலவ இறைவனை வேண்டுகிறேன்.

நம் நாட்டில் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமூக நீதி நிலைத்து, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

அன்பும் அமைதியும் நிறைந்த ஈத் திருநாள் அனைவருக்கும் வளமும் நலனும் தரட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com