

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 பேரின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
17 பேரின் திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டும், சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற 2 ஆண்டும் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை எனில் நேரடி தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை பின்பற்றாமல் நியமனம் மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.