என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக வலைதளங்களில் `சமத்துவம் காண்போம் போட்டிகள்-30-ந்தேதி வரை நடைபெறுகிறது
    X

    அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக வலைதளங்களில் `சமத்துவம் காண்போம்' போட்டிகள்-30-ந்தேதி வரை நடைபெறுகிறது

    • ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.
    • படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 13.4.2022 அன்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை, "சமத்துவ நாளாக" கொண்டாடுவது என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.

    அதனடிப்படையில், ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (எக்ஸ்), படவரி (இன்ஸ்டாகிராம்), முகநூல் (பேஸ்புக்), புலனம் (வாட்ஸ்அப்), வலையொளி (யூடியூப்) வாயிலாக இன்று முதல் 30-ந்தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    "சமத்துவம் காண்போம்" என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

    எனவே, பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்கு மாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.

    போட்டி 1 :- ஒரு கதை சொல்லட்டுமா?

    சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் (அல்லது) உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைக ளைப் பதிவிட வேண்டும். வடிவங்கள் : ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்கக் கதை.

    போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி, சமத்துவம் காண்போம், அளவு : 1 எம்பி

    போட்டி 3: வினாடி - வினாப் போட்டி, அடிப்படை உரிமைகள் (அல்லது) இந்திய அரசியல் அமைப்பு - அடிப்படைகள்.

    போட்டி 4: மீம்ஸ் போட்டி

    போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். அளவு : அளவு1 எம்பி

    போட்டி 5: வலையொலி, "நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்" - நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால், தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்? (அல்லது) அண்ணல் அம் பேத்கரின் கொள்கைகள் - இன்றைய காலத்திற்கேற்ற அதன் பங்கு. அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி), படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    போட்டி 6: உரிமைகளுக்கான ராப் பாடல் அனைவரும் சமம் என்ற தலைப்பில் பிரீ ஸ்டைல் ராப் செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும். அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி)

    போட்டி 7: செல்பி மற்றும் ஹாஷ்டாக் போட்டி அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்க ளுடன் செல்பி "இந்திய அரசியலமைப்பு" புத்தகத்து டன் செல்பி, அரசியல் அமைப்பின் முன்னுரையுடன் செல்பி என்ற ஹாஷ்டாக்குடன் பதிவு களை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndipr சமூக ஊடகக் கணக்கை குறிச்சொல் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் சமத்துவத்திற்கான உயர்வு என்ற ஹாஷ்டாக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். (அளவு: 1 எம்பி)

    போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பங்கேற்பா ளர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ் டாகிராம் ஸ்டோரியில் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும் பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும்.

    அதிக எண்ணிக்கையிலான ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்சார்ட் பகிரப்பட்ட தன் அடிப்ப டையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்ஞ்சல் மற்றும் (கியூ ஆர் கோடு) வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×