தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கடத்தி வந்த 2,200 லிட்டர் டீசல் பறிமுதல்

போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கடத்தி வந்த 2,200 லிட்டர் டீசல் பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வழியாக வாகனம் மூலம் டீசல் கடத்தி செல்லப்படுவதாக தூத்துக்குடி தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரைப்படி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு காவலர்கள் ராஜேஷ் குமார், ஆனந்த கிருஷ்ணன், ஜான்சன், செல்வின் ராஜா, முருகேசன், கிளிப்டன் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. அவை கீழ அரசரடியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து டீசலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் கடத்தலில் தொடர்புடை யவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com