ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசார் அணிவகுப்பு

தேர்தலின் போது ஏற்படும் கலவரங்களை தடுக்க போலீசார் உடன் இணைந்து பணியாற்ற துணை ராணுவத்தினர் மற்றும் எல்லைப்பாதுகாப்பு படையினரும் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் அணிவகுப்பு
போலீசார் அணிவகுப்பு
Published on

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தேர்தலின் போது ஏற்படும் கலவரங்களை தடுக்க போலீசார் உடன் இணைந்து பணியாற்ற துணை ராணுவத்தினர் மற்றும் எல்லைப்பாதுகாப்பு படையினரும் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு குஜராத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று பாதுகாப்பு பணிக்காக வந்தனர். அவர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் நகர் இன்ஸ்பெக்டர் வினோதா, கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com