பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண் சுட்டுக்கொலை

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண்ணை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண் சுட்டுக்கொலை
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள பரியல் போஸ்ட் பகுதியில் அடிக்கடி ஊடுருவல்கள் நடப்பது உண்டு. இதனால் அங்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்து ஒரு இளம்பெண் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார். எல்லையில் உள்ள கம்பி வேலிகளை கடந்து அவர் இந்தியாவுக்குள் வந்தார். இதை கண்டதும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உஷாரானார்கள். அந்த இளம்பெண்ணை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர்.

எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத அந்த இளம்பெண் தொடர்ந்து முன்னேறி வந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும்படி இருந்தன.

இதனால் அந்த பெண்ணை நோக்கி எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பெண் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. என்ன நோக்கத்திற்காக ஊடுருவினார் என்பது தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com