கருணாநிதி மறைவையொட்டி திமுக- கூட்டணி கட்சியினர் நாளை மவுன ஊர்வலம்- சுரேஷ்ராஜன் அறிக்கை

நாகர்கோவிலில் நாளை கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மவுன ஊர்வலம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கிறது. #karunanidhideath #dmk
கருணாநிதி மறைவையொட்டி திமுக- கூட்டணி கட்சியினர் நாளை மவுன ஊர்வலம்- சுரேஷ்ராஜன் அறிக்கை
Published on

நாகர்கோவில்:

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் களத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் நின்று வெற்றிகண்ட மாமனிதர் உலக மக்களின் இதயங்களில் வாழும் தலைவர் கருணாநிதி.

அவருக்கு அஞ்சலி செலுத்த நாளை (12-ந்தேதி) மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையிலும், அனைத்து தோழமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் முன்னிலையிலும் மவுன ஊர்வலம் நடக்கிறது. 

இந்த ஊர்வலம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, வடசேரி, மணி மேடை வழியாக நாகர்கோவில் பூங்காவுக்கு வந்து சேரும். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  #karunanidhideath #dmk

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com