search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமைத்தொகை: வருகிற 5-ந் தேதிக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயாராகிறது
    X

    மகளிர் உரிமைத்தொகை: வருகிற 5-ந் தேதிக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயாராகிறது

    • குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
    • நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது.

    இதற்காக குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1 கோடியே 64 லட்சம் விண்ணப்பங்களின் விவரங்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற 5-ந் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது பற்றி பொதுமக்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதில் நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.ஓ. அல்லது சப்-கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண முடியும்.

    Next Story
    ×