என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மகளிர் உரிமைத்தொகை: வருகிற 5-ந் தேதிக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயாராகிறது
- குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது.
இதற்காக குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1 கோடியே 64 லட்சம் விண்ணப்பங்களின் விவரங்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற 5-ந் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது பற்றி பொதுமக்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதில் நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.ஓ. அல்லது சப்-கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்