search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொல்லிமலை ஆகாய கங்கை அருவி வறண்டது- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    X

    கொல்லிமலை ஆகாய கங்கை அருவி வறண்டது- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    • செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன.
    • அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.

    சேந்தமங்கலம்:

    இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதனால் இங்கு எல்லாம் சீசனிலும் சுற்றுலா பயணிகள் வருகைப்புரிவார்கள். குறிப்பாக கொல்லிமலை முக்கிய இடமாக இருப்பது ஆகாய கங்கை, மாசிலா அருவி, அறப்பள்ளீஸ்வரர், கொல்லிபாவை என பல இடங்கள் உள்ளது.

    70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். இங்கிருந்து வழிநெடுகிலும் லாட்ஜ், ஹோட்டல், ரிசார்டுகள் காணப்படுகின்றன.

    செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன.

    இந்த மூன்றும் கொல்லிமலையின் அழகை ரசிக்க உதவுகின்றன. செம்மேட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் 'அறப்பளீஸ்வரர் கோயில்' அமைந்திருக்கிறது.

    அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வானில் இருந்து நீர் வீழ்வது போல் இருப்பதால் பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும்.

    இங்கு செல்வதற்கு நுழைவு கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். நல்ல உடல்நிலை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏனென்றால் படிகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால் இறங்குவதும், ஏறுவதும் கடினம். கிட்டத்தட்ட 140 அடி உயரம்கொண்டது இந்த அருவி.

    படிக்கட்டுகளில் இறங்கி அருவிக்கு அருகில் செல்ல, செல்ல அருவியில் கொட்டும் தண்ணீரில் இருந்து வரும் சாரல் முழுவதுமாக குளித்தது போல மாற்றிவிடும். ஆகாய கங்கை அருவி கிட்டத்தட்ட 300 அடி உயரம்கொண்டது. இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ஆகாய கங்கை பார்க்கும்போது இயற்கையின் ஒட்டு மொத்த அழகையும் நம்ம கண் முன்னாடி தோன்றும். மேலே இருந்து விழும் தண்ணீர் ஊசி போன்று நம் உடல்மேல் படும். இதனால் ஊசி அருவியும் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.

    இதில் ஏப்ரல் மே, ஜூன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது . ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது.

    தற்போது நம் அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. அருவில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×