search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி பயணம்
    X

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி பயணம்

    • பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் தேர்தல் அதிகாரி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    • நாடு முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயற்சிகளை அளித்து வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்காக நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    மேலும் நாடு முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயற்சிகளை அளித்து வந்தார். 2 நாள்கள் டெல்லி பயணத்தை முடித்து விட்டு நாளை (வியாழக்கிழமை) அவர் சென்னை திரும்ப உள்ளார்.

    Next Story
    ×