என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருப்பத்தூர் அருகே மர்ம கார்: ஏ.டி.எம். கொள்ளை கும்பல் பயன்படுத்தியதா? என விசாரணை
- போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.
- கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.
திருப்பத்தூர்:
திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து வடமாநில கும்பல் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் கொரட்டியில் மர்ம கார் ஒன்று சந்தேகம் அளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.
கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.
ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் தேடிவரும் நிலையில் மர்ம கார் சிக்கியுள்ளதால் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடைய கும்பல் வந்த காரா? என்ற கோணத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கேரள வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்