search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது

    • திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் இந்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால் திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது ஆசிரியர் கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும்.

    இதேபோல் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும் 15-ந்தேதி நடைபெறும்.

    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 16-ந்தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாறுதல்) 16-ந்தேதியும் நடைபெறும்.

    கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீளத்தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் 17-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) மற்றும் அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 19-ந் தேதியும் நடைபெறுகிறது.

    அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 17-ந்தேதி நடைபெறும்.

    இதே மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 18-ந்தேதி நடைபெறும். இடை நிலை ஆசிரியர் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 20-ந்தேதி நடைபெறும்.

    பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆசிரியர்களுக்கு 22-ந்தேதியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் 23-ந்தேதியும் நடைபெறும்.

    இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு 24-ந்தேதியும், கலந்தாய்வு நடைபெறும்.

    அரசு நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் வட்டத்திற்குள் 25-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 26-ந்தேதியும் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×