search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை காசிமேடு மார்க்கெட்டில் மீன் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பெண்கள்
    X

    சென்னை காசிமேடு மார்க்கெட்டில் மீன் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பெண்கள்

    • காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது.

    ராயபுரம்:

    சென்னையில் உள்ள காசிமேடு மீன்மார்க்கெட் மிகப்பெரிய மீன்சந்தையாக உள்ளது. சுமார் 1500 விசைப்படகுகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தடைகாலத்தை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காசிமேடு மீன்மார்க்கெட் களை கட்டி காணப்படும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நள்ளிரவில் தொடங்கும் மீன்வியாபாரம் காலை 7 மணி வரை விறுவிறுப்பாக இருக்கும்.

    கடலுக்குள் சென்று படகுகளில் ஆண்கள் மீன் பிடித்து வந்தாலும் அதனை கரையில் இறக்கி மீன் ஏலக் கூடத்திற்கு எடுத்து செல்வது, மீன்களை தரம் பிரிப்பது, ஏலம் விடுவது, விற்பனை செய்வது, மீன்களை சுத்தம் செய்து கொடுப்பது என அனைத்திலும் பெண்கள் கொடி கட்டி பறக்கிறார்கள். இதனால் காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரும்பாலும் காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக இந்த மீன்விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். இதுதொடர்பாக மீன்களை சுத்தப்படுத்தி கொடுக்கும் பெண் ஒருவர் கூறியதாவது:-

    காசிமேட்டில் மீன் விற்பனையில் பெரும்பாலும் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப சிறிய துண்டுகளாக வெட்டி கொடுப்போம். சில நிமிடத்திலேயே மீன்களை சுத்தப்படுத்தி கொடுத்து விடுவோம். ஒரு மீனை 65 துண்களாகவும் வெட்டி கொடுத்து உள்ளேன். ஒரு கிலோ சூறை மீனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்வோம். இறால் மீன்களை 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சுத்தம் செய்து கொடுத்து விடுவோம்.

    பல தலைமுறைகளாக பலர் இங்கு மீன் விற்பனை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களது வாழ்வாதாரமே இந்த காசிமேடு சந்தைதான்.

    குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது. காசிேமடு மீன்விற்பனை கூடத்தை நவீனமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×