search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் செய்த வட மாநில பெண்
    X

    உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் செய்த வட மாநில பெண்

    • தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வந்து அடைந்தார்.
    • நான் கடந்து வந்த பாதையில் கடுமையான சூறாவளி காற்று, பனி மற்றும் வெயிலின்தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.

    கன்னியாகுமரி:

    மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்தவர் பிரீத்தி மாஸ்க் (வயது 46).

    இவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் தனது சைக்கிள் பயணத்தை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் இருந்து கடந்த 12-ந்தேதி தொடங்கினார்.

    அவர் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வந்து அடைந்தார்.

    இவர் மொத்தம்உள்ள 3ஆயிரத்து 676 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்கள் 22 மணி நேரம் 21 நிமிடங்களில் கடந்து நேற்று கன்னியாகுமரி வந்தடைந்து சாதனை புரிந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் அவர் தொடர்ந்து சைக்கிள் மிதித்து உள்ளார். தனது சாதனை குறித்து சைக்கிள் பயண வீராங்கனை பிரீத்தி கூறுகையில், மக்களிடம் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

    நான் கடந்து வந்த பாதையில் கடுமையான சூறாவளி காற்று, பனி மற்றும் வெயிலின்தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என்றாலும் வழிநெடுகிலும் மக்கள் எனது கோரிக்கைக்கு பெரும் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் என்றார்.

    Next Story
    ×