search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெமிலிச்சேரி-தையூர் ஏரிகளில் ஆயிரக்கணக்கில் குவிந்த வெளிநாட்டு வாத்துக்கள்: பறவை ஆர்வலர்கள் வியப்பு
    X

    நெமிலிச்சேரி-தையூர் ஏரிகளில் ஆயிரக்கணக்கில் குவிந்த வெளிநாட்டு வாத்துக்கள்: பறவை ஆர்வலர்கள் வியப்பு

    • நகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 40 ஆயிரத்து 598 பறவைகள் இருந்தன.
    • தையூர், நெமிலிச்சேரி ஏரிகளில் தட்டை வாயன் வாத்துக்கள் காணப்பட்டன

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாதம் 28-ந் தேதி, 29-ந் தேதி நடைபெற்றது. சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்து வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் மாணவர்கள் கணக்கெடுப்பு செய்தனர்.

    இதில் அதிகபட்சமாக நகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 40 ஆயிரத்து 598 பறவைகள் இருந்தன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 882 பறவைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 412 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டு வந்தது. மொத்தம் 644 இடங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடந்து இருந்தது.

    இதற்கிடையே கேளம்பாக்கம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தையூர் ஏரிகளுக்கு வெளிநாடு மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் இடம் பெயர்ந்து வந்து உள்ளது. இது பறவை ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மகுடித்தாரா வாத்து, ஆண்டி வாத்து, ஊசிவால் வாத்துக்கள் அதிகம் காணப்படுவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். உணவுக்காக இந்த வகை வாத்துக்கள் அதிகம் இடம் பெயர்ந்து வந்து இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பறவை ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "தையூர், நெமிலிச்சேரி ஏரிகளில் தட்டை வாயன் வாத்துக்கள் காணப்பட்டன. இது இந்த நீர்நிலைகளுக்கு வந்திருப்பது அரிது. வடகிழக்கு பருவமழை சில இடங்களில் குறைவான அளவு பதிவாகி உள்ளது. இதனால் இடம் பெயர்ந்து வரும் வாத்துக்களுக்கு போதிய உணவு கிடைக்க வில்லை. உணவு கிடைக்கும் இடத்திற்கு அவை இடம் பெயர்ந்து வருகின்றன" என்றார்.

    Next Story
    ×