search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே தொழிற்சாலை கழிவுகள் ஏரியில் கொட்டி எரிப்பு- கிராம மக்கள் குற்றச்சாட்டு
    X

    திருவள்ளூர் அருகே தொழிற்சாலை கழிவுகள் ஏரியில் கொட்டி எரிப்பு- கிராம மக்கள் குற்றச்சாட்டு

    • கடந்த வடகிழக்குபருவ மழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது.
    • நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி ஊராட்சி பகுதியில் உள்ளது காட்டுத்தாங்கள் ஏரி. இந்த ஏரி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    கடந்த வடகிழக்குபருவ மழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. எனினும் காட்டுத்தாங்கல் ஏரியில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் ஏரி தற்போது வறண்டு மணல் மற்றும் முட்புதர்களாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீ பெரும்புதூர், இருங்காட்டு கோட்டை மற்றும் அரண்வாயல், போளிவாக்கம், வெள்ளவேடு, திருமழிசை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தொழிற்சாலை கழிவுகள் இந்த ஏரியில் கொட்டி எரிக்கப்படுகிறது.

    இதனால் இப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப பட்ட ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:-

    பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை தினமும் லாரி, லாரியாக கொண்டு வந்து காட்டுத் தாங்கள் ஏரியில் கொட்டி எரித்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×