என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆண்டிபட்டி அருகே கோவில் திருவிழாவில் தம்பிரான் ஓட்டம்
- தம்பிரான் ஓட்டம் 3 முறை நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
- பாரம்பரியமிக்க தம்பிரான் ஓட்ட விழாவில் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பார்வையிட்டனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பைத்தம்மாள், பொம்மையைசாமி கோவிலில் மாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கரிசல்பட்டி கிராம பூசாரி திருமலை வடிவேல் பாண்டியன் மற்றும் கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்த செல்லச்சாமி, மலையாண்டிநாயக்கன் பட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டியன், தர்மலிங்கபுரத்தை சேர்ந்த கணேஷ் மற்றும் ஜக்கையன், ராமர் உள்ளிட்டோர் தம்பிரான் ஓட்டம் விழாவை தலைமை தாங்கி நடத்தினர்.
16 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் கிராமத்தில் நாட்டாமை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூஜை கூடைகளை உறுமி மேளம் முழங்க தேவராட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் ஊர் பட்டாதாரர்கள் மற்றும் பெரியதனம் ஆகியோர் முன்னிலையில் கொழுக்கட்டை தம்பிரான் ஓட்டம் நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட காளைகளை கோவில் வாசலில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் இருந்து ஓட விட்டனர். கோவில் வாசலில் வெள்ளை துண்டு விரித்து எலுமிச்சை பழம் வைக்கப்பட்டிருந்தது. எந்த காளை முதலில் விரித்து வைத்த வெள்ளை வேட்டியை கடக்கிறதோ அந்த காளைக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேவராட்டத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிவரும் போது காளையின் உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் மூங்கில் குச்சியுடன் காளைகளுக்கு உற்சாகம் அளித்து ஓடி வந்தனர்.
இதேபோல் இந்த தம்பிரான் ஓட்டம் 3 முறை நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பாரம்பரியமிக்க இந்த தம்பிரான் ஓட்ட விழாவில் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பார்வையிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்