search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உங்கள் கோரிக்கைகள் நிறைவேற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்- ஜெயபெருமாள் பிரசாரம்
    X

    உங்கள் கோரிக்கைகள் நிறைவேற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்- ஜெயபெருமாள் பிரசாரம்

    • திமுக ஆட்சியைப் போல் தகுதியான பெண், தகுதியற்ற பெண் என பிரிக்கப்படாது.
    • போதைப்பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கமுதி தாலுகா பேரையூரில் பருத்திக்காட்டில் வேலை செய்த விவசாயிகளிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் பாக்குவெட்டி, பசும்பொன், கோட்டைமேடு, கமுதி பேரூராட்சி வளைய பூக்குளம், மண்டலமாணிக்கம், கிளாமரம், ராமசாமிப்பட்டி, நீராவி, கீழராமநதி, கே.எம்.கோட்டை, எம்.எம்.கோட்டை ஆகிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு 3 ஆயிரம் வழங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் போல் தகுதியான பெண், தகுதியற்ற பெண் என பிரிக்கப்படாது. அனைத்து மகளிருக்கும் 3 ஆயிரம் வழங்கப்படும். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நான் சாதாரண விவசாயி, எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். கடந்த தேர்தலில் பொய்களை அவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றவரை பார்த்திருக்கிறீர்களா? அடையாளம் தெரியுமா என பொதுமக்களிடமே கேட்டார். பார்த்ததில்லை எனவும், எங்கள் ஊர்பக்கமே வந்ததில்லை என்றும் கூறினார்கள். எனவே உங்கள் கோரிக்கைகள் நிறைவேற இரட்டை இலைக்கு வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    வேட்பாளருடன் ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் மணிகண்டன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வக்கில் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், முதுகுளத்தூர் பகுதி ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செந்தில்குமார், தேரிருவேலி கருப்பசாமி, கிடாத்திருக்கை சண்முகபாண்டி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தேமுதிக, புதிய தமிழகம் மருது சேனா உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×