search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெருந்துறை அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்
    X

    பெருந்துறை அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வீடுகளில் இன்று கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் அறவழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருேக உள்ள காஞ்சிகோவில் கீழ்பவானி கால்வாயில் 51 மற்றும் 53- வது மைல்களான ஆயப்பரப்பு மற்றும் சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் காத்திருப்பு போராட்டம் செய்தவர்களிடம் கால்வாயில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படாது என உறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் போராட்டக்காரர்கள் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கலெக்டரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து காஞ்சிகோவில் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் அறவழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    Next Story
    ×