search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி இளம்பெண்களிடம் பண மோசடி- தேனாம்பேட்டை போலீசில் புகார்
    X

    சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி இளம்பெண்களிடம் பண மோசடி- தேனாம்பேட்டை போலீசில் புகார்

    • புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
    • மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை தி.நகர் பிரகாசம் தெருவில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் கொடுத்து சினிமாவில் நடிக்க விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களிடம் பணத்தை பறித்து மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி துணை நடிகர்கள், நடிகைகள் சிலரும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களிடமும் பணத்தை வசூலித்து மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர். அப்போதுதான் தங்களது நிறுவனத்தின் பெயரை சொல்லி ஏமாற்றி பண மோசடி நடைபெற்றிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் 2 செல்போன் எண்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் அந்த எண்களில் இருந்து பேசி இருக்கும் நபர்கள்தான் பண வசூலில் ஈடுபட்டு மோசடி செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×