search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2,200 பேர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் நாளை நடக்கிறது
    X

    2,200 பேர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் நாளை நடக்கிறது

    • விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடக்கிறது.
    • சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி மாளிகை அருகே நாளை (25-ந்தேதி) காலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடக்கிறது. இதில் 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    போலீஸ் முன்னாள் ஐ.ஜி. சொக்கலிங்கம், ஜேப்பியார் பல்கலைக் கழக இயக்குனர் ரெஜினா, துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஐ.ஐயப்பன் ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்கள். சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×