search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாஞ்சோலையில் கோவில் முன்பு படுத்திருக்கும் குட்டி சிறுத்தை- சமூக வலைதளங்களில் காட்சிகள் வைரல்
    X

    மாஞ்சோலையில் கோவில் முன்பு படுத்திருக்கும் குட்டி சிறுத்தை- சமூக வலைதளங்களில் காட்சிகள் வைரல்

    • பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
    • குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குபட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குள் உள்ளன. இதில் குறிப்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோவிலுக்கு சிலர் வழிபட சென்றபோது கோவிலின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ஆசுவாசமாக படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோயில் முகப்பில் படுத்து இளைப்பாறும் குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×