என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடல் சீற்றம் காரணமாக 2-வது நாளாக மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- மண்டபம் கடலில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
- மீன்பிடி தடையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
மண்டபம்:
இலங்கையையொட்டி உள்ள வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு காணப்படும். குறிப்பாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடி அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை. இதனால் மண்டபம் கடலில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாளாக மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தடையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்