search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யா மரணம்: தலைவர்கள் அஞ்சலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யா மரணம்: தலைவர்கள் அஞ்சலி

    • கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் பற்றி மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயும் அதை நிறைவேற்றி காட்டியவர்.
    • 1997-ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, 1998-ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தியவர்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது102). சுதந்திர போராட்ட தியாகியான இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த என்.சங்கரய்யா கடந்த சில நாட்களாக சளி-இருமலால் அவதிப்பட்டு வந்தார்.

    உடனடியாக அவரை நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அவர் மூச்சு விட சிரமப்பட்டதால் செயற்கை சுவாச கருவி பொருத்தி அவருக்கு சிகிச்சை மேற்கொண்டனர். டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 102.

    அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

    சங்கரய்யா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×