search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாக குழு கூட்டத்திற்கு  கமல்ஹாசன்  அழைப்பு
    X

    மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாக குழு கூட்டத்திற்கு கமல்ஹாசன் அழைப்பு

    • அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும்.
    • அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறும்.

    அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் கமல்ஹாசன் இருந்து வருகிறார். இது தொடர்பாக கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளார்.

    Next Story
    ×