ஹேப்பி தமிழ்நாடு- வடமாநில தொழிலாளர்கள் உற்சாகம்

பாதுகாப்புக்காக தமிழ்நாடு போலீஸ் எப்போதும் இருக்கும்.வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்தி என்பதை புரிந்து கொண்டோம் என்றனர்.
ஹேப்பி தமிழ்நாடு- வடமாநில தொழிலாளர்கள் உற்சாகம்
Published on

அம்பத்தூர்:

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பாடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி கொரட்டூர் போலீஸ் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் சுற்றி உள்ள பகுதிகளில் பணிசெய்து வரும் சுமார் 500 வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பரவி வரும் வதந்தி குறித்து பேசினர். அப்போது தொழிலாளர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் கூறப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'தற்போது பரவி வரும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். பாதுகாப்புக்காக தமிழ்நாடு போலீஸ் எப்போதும் இருக்கும். உங்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் போலீசார் வழங்குவார்கள் என்று இந்தியில் தெரிவித்தார்.

இதனை புரிந்து கொண்ட வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாடு தான் எங்களுக்கு பாதுகாப்பான இடம், நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக பணிபுரிகிறோம், எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்தி என்பதை புரிந்து கொண்டோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகமாக ஹேப்பி தமிழ்நாடு... ஹேப்பி தமிழ்நாடு.. என்று குரல் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com