search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஈ.பி.எஸ் மரியாதை
    X

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஈ.பி.எஸ் மரியாதை

    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வருகை.
    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதற்கு முன்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×