search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக ஆட்சி- அமைச்சர் முத்துசாமி
    X

    பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக ஆட்சி- அமைச்சர் முத்துசாமி

    • பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது.
    • பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கயல்விழி ஆகியோர் பேசுகையில், தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.



    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் பிரதீப் குமார், பொருளாளர் ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×