search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டிபன் பாக்ஸ் குண்டுகளுடன் ரவுடி கைது- சதிச்செயலுக்கு திட்டம் தீட்டினாரா?
    X

    டிபன் பாக்ஸ் குண்டுகளுடன் ரவுடி கைது- சதிச்செயலுக்கு திட்டம் தீட்டினாரா?

    • போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
    • எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் அண்ணா சத்யா நகர் பகுதியில் மதுபோதையில் கணவர் அடித்து உதைப்பதாக பெண் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை தாக்கிய வாலிபர் வீட்டில் டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்ட போலீசார் டிபன் பாக்சுகளை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் டிபன் பாக்சுக்குள் குண்டுகள் உள்ளது திறந்தால் வெடித்துவிடும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பின் வாங்கினார்கள். அதற்குள் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்பதும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் டிபன் பாக்சை திறந்து பார்த்தனர். அப்போது டிபன் பாக்சுக்குள் 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டையில் இருந்து தனது எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.

    ரவுடிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி வெளியில் செல்லும்போது டிபன்பாக்ஸ் குண்டுகளோடு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதையடுத்து ரவுடி கார்த்திக் சதி திட்டம் தீட்டும் நோக்கத்தில் சென்னையில் பதுங்கி இருந்தாரா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசா ரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×