search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,197 கன அடியாக குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,197 கன அடியாக குறைந்தது

    • கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.56 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை அணைக்கு 4,197 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×