search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூர் திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 95 திருமணங்கள்- கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    கடலூர் திருவந்திபுர தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் செய்த கொண்ட ஜோடியை படத்தில் காணலாம்.

    கடலூர் திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 95 திருமணங்கள்- கடும் போக்குவரத்து நெரிசல்

    • ஆடி மாதம் முடிந்து இன்று முகூர்த்த நாள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது.
    • திருவந்திபுரம் ஊர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.

    இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆடி மாதம் முடிந்து இன்று முகூர்த்த நாள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனால் திருவந்திபுரம் ஊர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர். இந்த நிலையில் சாலையில் 75 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 20 திருமணங்கள் என 95 திருமணம் நடைபெற்றது.

    இதனால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வந்தனர்.

    Next Story
    ×