search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்வு
    X

    சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்வு

    • சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.
    • வணிக கட்டிடங்களாக இருந்தால் ரூ.2 ஆயிரத்து 300 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டண உயர்வு வருகிற 10-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

    அதில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு, கட்டிடங்கள் கட்டினால் 100 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஏழைகளை பாதிக்காத வகையில் 40 சதுர மீட்டருக்கு குறைவான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு 10 சதுர மீட்டருக்கு 90 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    அதே போல் 41 முதல் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுபவர்களுக்கு 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் நலன் கருதி இந்த கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    100 சதுர மீட்டருக்கு மேல் அதாவது 1076 சதுர அடிக்கு மேல் வீடு கட்டினால் கட்டிட அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதாவது 101 சதுர மீட்டர் முதல் 401 சதுர மீட்டர் அளவுக்கு (4316 சதுர அடி) வீடுகள் கட்டும் போது 10 சதுர மீட்டருக்கு ரூ.1,050 ஆக இருந்த கட்டணம் ரூ.2 ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வணிக கட்டிடங்களாக இருந்தால் ரூ.2 ஆயிரத்து 300 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இதன்படி புதிய கட்டணம் வருகிற 10-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×