செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்...

வாரத்திற்கு இரண்டு முறை அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும்.பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்...
Published on

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த அண்டு ஜூன் 14-ந்தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.

உள்ளூர் நீதிமன்றம் (சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்) மூன்று முறை ஜாமின் மனுவை நிராகரித்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அண்டு அக்டோபர் மாதம் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

விசாரணை குற்றவாளியை நீண்ட நாளைக்கு சிறையில் வைக்க முடியாது என்ற வகையில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.

அவருக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஒகா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளனர்.

வாரத்திற்கு இரண்டு முறை அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை சிதைக்கக் (குலைப்பது) கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதித்துள்ளனர். நிபந்தனைகள் குறித்து முழு விவரம் மாலை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தில் ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com