search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக் கொலை- 5 பேருக்கு வலைவீச்சு
    X

    ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக் கொலை- 5 பேருக்கு வலைவீச்சு

    • பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தைசாமி உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் கொத்தனார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கலா.

    கடந்த சில மாதங்களாக சிவக்குமாருக்கும் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குழந்தைசாமி என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று இரவு குழந்தைசாமி செல்போனில் சிவகுமாரிடம் பேசினார். அப்போது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வோம் என்று கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய சிவகுமார் அவருடன் காரில் சென்றதாக தெரிகிறது.கோட்டையூர் கிராமத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு குழந்தைசாமி சிவக்குமாரை அழைத்துச் சென்றார்.

    அங்கு பண பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த குழந்தை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மணிகண்ட பிரபு, செல்லையா, பாலாஜி உள்பட 4 பேர் சிவகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் வலியால் துடித்த அவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து குழந்தைசாமி உட்பட அந்த கும்பல் அவரை காரில் ஏற்றிக் கொண்டு வீட்டு முன்பு போட்டு விட்டு சென்றது.வீட்டின் வெளியே சிவக்குமார் ரத்த காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்து அவரது மனைவி கலா அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கணவரை காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவக்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தைசாமி உட்பட 5 பேரை தேடி வருகின்றனர். பண பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×