என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தைக்கு பதிலாக மாற்று ஏற்பாடு
- கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு சந்தை நடைபெற்றது.
- பொங்கல் சிறப்பு சந்தை இல்லாமல் சிறப்பாக செயல்படுத்த மாற்று ஏற்பாட்டுகள் மாவட்ட அதிகாரி சாந்தி தலைமையில் நடந்து வருகிறது.
சென்னை:
பொங்கல், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ காலங்களில் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் சிறப்பு சந்தை செயல்படுத்தப்படும்.
இதற்கான டெண்டர் விடப்பட்டு அதை எடுத்தவர்கள் கடைகள் வைப்பதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவார்கள்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு சந்தை நடைபெற்றது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அயுத பூஜைக்கும் சிறப்பு சந்தை நடந்தது.
தற்போது பொங்கல் பண்டிகைக்கான கரும்பு, மஞ்சள் குலை, வியாபாரத்திற்கான பொருட்கள் போன்றவை விற்பனை செய்வதில் வியாபாரிகள் தீவிரமாக இருப்பார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு லாரியில் இருந்தவாறே கட்டுக்கட்டாக மொத்தமாக விற்பனை செய்வார்கள்.
ஆனால் இந்த பொங்கலுக்கு சிறப்பு சந்தை நடத்தப்படவில்லை. அதற்கான டெண்டர் அழைப்பு எதுவும் கோரப்படவில்லை என்று மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாட்டின் மூலம் பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கடந்த முறை சிறப்பு சந்தை வியாபாரிகள் சாலையில் கடைகளை போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த முறை வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கரும்பு, மஞ்சள் குலை, வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
கரும்புகளை கொண்டு வரும் விவசாயிகள், வியாபாரிகள், விற்பனை செய்வதற்காக சிறு கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட உள்ளது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அதற்கேற்ப நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. பொங்கல் சிறப்பு சந்தை இல்லாமல் சிறப்பாக செயல்படுத்த மாற்று ஏற்பாட்டுகள் மாவட்ட அதிகாரி சாந்தி தலைமையில் நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்