search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போகிப்பண்டிகை நாளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் எரிக்க தடை
    X

    போகிப்பண்டிகை நாளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் எரிக்க தடை

    • சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகளை பொதுமக்கள் யாரும் தீவைத்து எரிக்காமல் இருக்கவும், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடத்தில் அளித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    1-வது வார்டு பஞ்சுப்பேட்டை, 3-வது வார்டு ஏகம்பரநாதர் சன்னதி தெரு, 5-வது வார்டு பூக்கடை சத்திரம், 17-வது வார்டு, பி.எஸ்.கே. தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் 19-வது வார்டு ரெயில்வே ரோடு, 24-வது வார்டு 3-ம் கால் திருவிழா மண்டபம் தெரு, 25 வது வார்டு அண்ணா தெரு, 33-வது வார்டு விளக்கொளி கோயில் தெரு, 36-வது வார்டு காவலான் தெரு, 48 வது வார்டு ஓரிக்கை ஜங்சன், 49-வது வார்டு சதாவரம் மெயின் ரோடு, 14-வது வார்டு ஆவாக்குட்டை, 11-வது வார்டு திருவேங்கடம் தெரு, 44- வார்டு இரட்டை கால்வாய், 39-வது வார்டு என்.ஜி.ஓ. நகர் ஆகிய 16 இடங்களில் அளித்து சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×