search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
    X

    ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

    • அரிச்சல்முனை கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
    • அங்கு பூஜை முடித்து மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.

    மதுரை:

    மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    இதற்கிடையே, இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.

    இந்நிலையில், ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். மதுரை சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    Next Story
    ×