search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரம்ஜான் பண்டிகை காலத்திலும் களையிழந்த சமயபுரம் ஆட்டுச்சந்தை
    X

    சமயபுரம் ஆண்டுச் சந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகளை காணலாம்.

    பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரம்ஜான் பண்டிகை காலத்திலும் களையிழந்த சமயபுரம் ஆட்டுச்சந்தை

    • பணம் கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை.
    • ஆடு வாங்கும்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே சமயபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக சமயபுரம் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடுகள் மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் சமயபுரம் சந்தைக்கு வருகின்றனர்.

    இந்த வார சந்தையில் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழக்கமாக ஆடுகள் விற்பனை நடைபெறும், பண்டிகை கால கட்டங்களில் சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை யாகும். இந்த நிலையில் வருகின்ற 11-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரம் தொடங்கியது.

    ஆடுகள் அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று சந்தை கூடியது வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர். சந்தை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், "நாங்கள் எப்போதுமே சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்க வருவோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரிகள் பணம் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது. பணம் கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை.

    ரூ.49,000 கொண்டு வந்தால் இரண்டு முதல் மூன்று ஆடுகள் மட்டுமே வாங்க முடியும் விக்கிற விலைவாசிக்கு இதனால் விவசாயிகளும் வியாபாரிகளுக்கும் கஷ்டமாக உள்ளது. யாரு யாரு எவ்வளவோ பணம் கொண்டு செல்கிறார்கள் அதையெல்லாம் தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரியவில்லை.

    வியாபாரத்திற்கு கொண்டு செல்லும் பணத்தை தான் பிடிக்கிறார்கள். குறிப்பிட்டு இந்த ஆட்டு வண்டியில் கொண்டு செல்லும் வியாபாரிகள் பணத்தை தான் வந்து வியாபாரிகள் பணத்தை தான் வந்து பிடிக்கிறார்கள். இதனால் பயந்து கொண்டு பணம் கொண்டு வருவதில்லை. இதனால் விவசாயிகளி டம் சந்தையில் வந்து ஆடுகள் வாங்க முடியவில்லை. ஆடு வாங்கும்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை. கடன் சொன்னாலும் விவசாயிகள் தருவார்களா. வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் தேர்தல் அதிகாரிகள் சற்று அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

    விலை சற்று அதிகமாக உயர்ந்து ஆடுகளை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுமார் ரூ 40 லட்சத்திற்கும் மட்டுமே விற்பனை ஆகியது என்று வியாபாரிகள் வருத்துடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×