search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி- கைதான தி.மு.க. பிரமுகரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்
    X

    வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி- கைதான தி.மு.க. பிரமுகரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(வயது 35). தி.மு.க. பிரமுகரான இவர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ.8 லட்சமும், சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சமும் வாங்கி கொண்டு அவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார். அவரிடம் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? அவர் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அதில் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அய்யனார்(57) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. லட்சுமணனுக்கு தி.மு.க.வில் பெரிய அளவில் பொறுப்புகள் ஏதும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி தன்னை இளைஞரணி நிர்வாகி என்று கூறி கொண்டுள்ளார்.

    பின்னர் தனக்கு பழக்கமான அய்யனார் மூலமாக அவரது உறவினர் பெண்ணான சித்ராவிடம் நைசாக பேசி நம்ப வைத்து முதலில் ரூ.25 ஆயிரம் வாங்கி உள்ளார். பின்னர் அவரிடம் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு ரூ.1 லட்சம் வேண்டும் என்று கூறி பல்வேறு தவனைகளாக மொத்தம் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் மற்ற 2 பேர்களிடமும் இதேபோல் தலா 8 லட்சம் பெற்றுள்ளார் என்பதும், இவர்களை அய்யனார் தான் லட்சுமணனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×