search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 3 தொகுதிகளிலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல்
    X

    சென்னையில் 3 தொகுதிகளிலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல்

    • தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
    • தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் 3 தொகுதி களுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உற்சாகமாக மனு தாக்கல் செய்தனர்.

    பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்பதால் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி வரிசையாக அழைக்கப்பட்டனர்.

    நேற்று நல்லநாளாக இருந்ததால் அரசியல் கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 3 தொகுதிகளிலும் சேர்த்து 52 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வடசென்னையில் தான் அதிகபட்சமாக 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் 21 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 16 பேரும், சுயேச்சைகள் 15 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வது முடி வடைவதால் இன்றும் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுவதை தொடர்ந்து சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    Next Story
    ×