என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 638 கனஅடியாக அதிகரிப்பு
- கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 17ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதேநேரம் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கடந்த 17-ந் தேதி முதல் வரத்தொடங்கியது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று வினாடிக்கு 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று காலை 54.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 55.14 அடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 105.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 12ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3868 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 17ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 13ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் மீதமுள்ள தண்ணீரும் படிப்படியாக மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 21.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்