search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாட்டு பொங்கல்- சென்னையில் இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்
    X

    மாட்டு பொங்கல்- சென்னையில் இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

    • மாட்டுப் பொங்கல் தினத்தோடு தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.
    • பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயரவில்லை.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங்கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.

    மாட்டுப் பொங்கல் தினத்தோடு தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது. அதனால் இன்று இறைச்சி கடைகள் வழக்கமாக மூடப்பட வேண்டும்.

    ஆனால் பண்டிகை நாளாக இருப்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையிலேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    சென்னையில் புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்கள் இன்று மூடப்பட்டன. ஆனாலும் சென்னையில் அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.

    நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட்டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.

    பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயரவில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 முதல் ரூ.1000-க்கும் விற்கப்பட்டது.

    Next Story
    ×