search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகர்கோவிலில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை- உருக்கமான தகவல்கள்
    X

    நாகர்கோவிலில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை- உருக்கமான தகவல்கள்

      நாகர்கோவில்:

      நாகர்கோவில் தட்டான் விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (30), மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ரூபா (28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

      இவர்களுக்கு 2 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். பிரவீனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் பிரவீன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

      நேற்று முன்தினம் விஷ மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது குழந்தைகள் அதை சாப்பிடாமல் துப்பி உள்ளது.

      பின்னர் கணவன்-மனைவி இருவரும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளனர். தனது சகோதரரிடம் சென்று தானும் மனைவியும் விஷம் தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனே அவரது சகோதரர் பிரவீனையும், ரூபாவையும் சிகிச்சைக்காக பீச் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். பிரவீனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் பிரவீனும் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

      இதையடுத்து பிரவீன், ரூபா இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரவீன், ரூபா தற்கொலைக்கான காரணம் குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக பிரவீன், மனைவியுடன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

      தொழிலில் ஏற்பட்ட கஷ்டத்தால் இந்த முடிவை எடுத்துக்கொள்வதாகவும் தனக்கு சொந்தமானவற்றை விற்று கடனை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார். தற்கொலை செய்து கொண்ட பிரவீன் முதலில் பன்றி பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அதில் போதிய அளவு லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் மர வியாபாரம் செய்துள்ளார். மேலும் கான்கிரீட் போட பயன்படுத்தப்படும் பலகை, வீடு கட்டும் உபயோகப்படுத்தப்படும் மர சாமான்களை வாங்கியும் விற்பனை செய்துள்ளார்.

      அடுத்தடுத்து தொழிலில் நஷ்டம் ஏற்படவே பிரவீன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் பிரவீன் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் அவருக்கு பணம் கிடைக்கும் என்று நம்பி இருந்தார். அந்த பணத்தின் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் லாட்டரி சீட்டிலும் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

      தற்கொலை செய்து கொண்ட பிரவீன், ரூபாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானவர் அங்கு திரண்டு உள்ளனர்.

      பிரவீன், ரூபா தம்பதியினரின் 2 குழந்தைகளும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது உள்ளது. கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      Next Story
      ×