search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் அடித்துக்கொலை: இரும்பு வியாபாரி தலைமறைவு
    X

    வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் அடித்துக்கொலை: இரும்பு வியாபாரி தலைமறைவு

    • தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர். தோப்பூர் தம்பி டாக்டர் தெருவை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 60). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    அதே பகுதியில் இவருக்கு சொந்தமான வீட்டில் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (42) என்பவர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து கொண்டு பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வீட்டு வாடகை பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் தனசேகர், பாலுவிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பாலு தனது வீட்டை காலி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலு மரக்கட்டையால் தாக்கியதில் தனசேகர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தனசேகரின் மனைவி சாந்தி அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த தனசேகர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுபற்றி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×