உடைந்த படிகட்டுடன் இயங்கும் அரசு பஸ்

பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது.பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர்.
உடைந்த படிகட்டுடன் இயங்கும் அரசு பஸ்
Published on

போச்சம்பள்ளி:

திருப்பத்தூர் டிப்போவிற்கு உட்பட்ட 13-பி அரசு பேருந்து திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை நாள்தோறும் இயக்கப்படுகிறது.

பல்வேறு சிறு கிராமங்களின வழியாக சென்று வரும் இந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை போச்சம்பள்ளி வந்த பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது. பயணிகள்

பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர். மேலும் ஆபத்தான முறையில் உள்ள இந்த படிக்கட்டு ஒரு வார காலமாக இதே நிலையில் இருப்பதாகவும், இதனை சீர்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆபத்தான முறையில் தொடர்ந்து ஒரு வார காலமாக பயணித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார். எனவே இந்த உடைந்த படிக்கட்டுக்கள் சீர்படுத்து பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டுவரவேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com