search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் போயின் சியானா மலர்கள்
    X

     கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் போயின் சியானா மலர்களை காணலாம்.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் போயின் சியானா மலர்கள்

    • செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கக்கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன.
    • மர வகைகளைச் சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பல்வேறு வண்ண வண்ண மலர்கள் அந்தந்த சீசனுக்கு ஏற்றவாறு பூத்துக்குலுங்கும்.

    இந்நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கக்கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. பெடோபோரம் டூபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரக்கூடிய வகைகளாகும். ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மலைப்பகுதிகளில் மட்டுமே பூக்கக்கூடிய இந்த மலர்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் பூத்துக்குலுங்குகிறது.

    மர வகைகளைச் சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன. இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மலைச்சாலைகளில் பூத்துள்ள மஞ்சள் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த பூக்கள் பூத்துள்ளதால் அதன் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    இந்த பூக்கள் மேலும் சில நாட்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×