search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கோவில் மகாதீப மலையில் பயங்கர தீ- மூலிகை செடிகள் மரங்கள் எரிந்தன
    X

    திருவண்ணாமலை கோவில் மகாதீப மலையில் பயங்கர தீ- மூலிகை செடிகள் மரங்கள் எரிந்தன

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.
    • மகா தீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டு தீ பரவியது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இங்குள்ள அண்ணாமலை உச்சியில் கார்த்திகை மாதம் திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள்.

    சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. நேற்று மகாதீபமலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென்று பரவி சுமார் பல மீட்டர் தூரம் வரை எரிந்தது. தீ விபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஏக்கரில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமாகி விட்டன. மகா தீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டு தீ பரவியது தெரியவந்துள்ளது.

    மலையில் தீ வைத்தவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் புனிதமாக கருதப்படும் அண்ணாமலை மீது தீ வைப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×