search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பிடிபட்டார்- பெங்களூரில் சுற்றி வளைத்தனர்
    X

    புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பிடிபட்டார்- பெங்களூரில் சுற்றி வளைத்தனர்

    • சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.
    • புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    புழல் சிறையில் இருந்து ஜெயந்தி என்ற பெண் 2 நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றார். கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிறை வாசல் வழியாகவே வெளியேறியது தெரியவந்தது.

    இது தொடர்பாக சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் தப்பியோடிய கைதி ஜெயந்தி பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பெண் கைதி ஜெயந்தி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×